மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்
சந்தேகம்:
தனது புத்திசாலித்தனத்தை தானே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அதிபலசாலி நோஞ்சான் ஆவதும் அதிபுத்திசாலி தவறு செய்வதும் உண்டு என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.
சிந்தனை:
படுக்கச் செல்லும் முன் கோபத்தை கைவிட வேண்டும்.
எப்போதும் மனதின், வார்த்தையின், செயலின் முழுமையான ஒத்திசைவின் மீது குறிக்கோள் வைத்திருக்க வேண்டும். எப்போதுமே உங்கள் சிந்தனைகளை சுத்தமானதாக வைத்திருந்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.
கோபமும் சகிப்புத்தன்மையின்மையும் சரியான புரிதலின் எதிரிகள்.
பிறரைப் போலவே நானும் சாதாரண மனிதன்தான்; தவறுகள் செய்யக் கூடியவன்தான் என்பதை உரைக்கிறேன். இருந்தபோதிலும், அந்தத் தவறுகளுக்காக என்னை நானே தாழ்த்திக் கொண்டு என் பாதையை மறுகண்டுபிடிப்பு செய்பவன் என்பதையும் அறிவிக்கிறேன்.
மனிதரான நமது சிறப்புத்தன்மை இந்த உலகத்தை மாற்றுவதில் இல்லை- அது இந்த அணுஉலகில் சாத்தியமில்லை. மாறாக, நம்மை நாமே மறுகட்டுமானம் செய்து கொள்வதில்தான் உள்ளது.
எப்படி இருக்க வேண்டும் என்று நம்புபவர்கள்தான் மனிதர்களாக உள்ளனர். நான் நம்பவில்லை என்றால் என்னால் எதையாவது செய்ய முடியாது. அது என்னை செயலற்றவனாக மாற்றுகிறது. ஆனால், என்னால் முடியும் என்று நான் நம்பும்போது அதை செயலாற்றுவதற்கான திறமையை நான் பெறுகிறேன். அந்தத் திறன்தான் என்னிடம் துவக்கத்தில் இல்லாமல் இருந்தது.
நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, நீங்கள் சொல்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கிறது.
எல்லாமும் நல்லதாக இருக்க வேண்டும், எல்லாமும் உண்மையானதாக இருக்க வேண்டும், சிந்தனை எல்லாம் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், வார்த்தைகளும் செயல்களும் என அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஏங்கும், அதற்காக போராடும் எளிய ஆத்மா நான். எனினும், அந்த உயரிய கொள்கையை அடைவதில் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறேன் என்பது மட்டும் உண்மை என்பதை அறிகிறேன். இது, வலி நிறைந்த ஒரு ஏறுதல்தான். எனினும், அந்த வலி தரும் ஏறுதலும் எனக்குள் ஒரு நேர்மறையான மகிழ்ச்சியைத் தரவே செய்கிறது. அதை நோக்கிய ஒவ்வொரு அடி முன்னேற்றமும் என்னை பலமானவனாகவும் அடுத்ததை எதிர்கொள்ளத் தகுதி உடையவனாகவும் ஆக்குகிறது.
எந்தச் சேவை அதன் சொந்த நலனுக்காக இருக்குமோ அந்தச் சேவைதான் உன்னதச் சேவையாக இருக்கும்.