Tributes To Gandhiji
அர்னால்ட் ஸ்வெய்க் |
காந்தி என்றொரு நட்சத்திரம் எழுந்தது. அகிம்சை என்ற கொள்கையை அவர்தான் உலகுக்குப் போதித்தார். |
ஹோ சி மின் |
“என்னையும் வேறு சிலரையும் புரட்சியாளர்கள் என்று கூறுவார்கள். என்னைப் பொறுத்தமட்டில், நான் மகாத்மா காந்தியின் சீடன்தான். அவர்தான் எங்களுக்கு குரு. |
டாக்டர் மார்ட்டின் லுõதர் கிங் ஜூனியர் |
பிறரைப் போலவே நானும் காந்தியைப் பற்றி அறிந்திருந்தேன். ஆனால், அவரைப் பற்றி தீவிரமாக சிந்திக்காமல் இருந்துவிட்டேன். அவரைப் பற்றி, அவரின் சத்தியாகிரகப் போராட்டங்களைப் பற்றிப் படிக்கத் துவங்கியதும், அவர் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. |
ரவீந்திரநாத் தாகூர் |
“இந்தியாவின் நிராதராவான லட்சக்கணக்கானோரின் வாசலில் நின்றவர் காந்தி. அவர்களைப் போலவே உடை உடுத்தி, அவர்களின் சொந்த மொழியிலேயே பேசினார். இந்த நாட்டின் லட்சோபலட்சம் மக்களின் ரத்தங்களையும் சதைகளையும் தனதாக கருதிய தலைவர் காந்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? |
யூ தான் |
காந்தியின் பெரும்பாலான கொள்கைகள் பிரபஞ்சம் முழுவதும் செல்லத்தக்கது. காலத்தால் அழியாததது. இந்தியாவைப் போல உலகம் முழுவதும், அமைதிதான் உன்னத குறிக்கோள்களை அடைவதற்கான வழிமுறை என்பதை ஏற்றுக் கொள்ளும் காலம் வெகுவிரைவில் இல்லை என்றே நான் நம்புகிறேன். |
ரிச்சர்ட் அட்டன்பரோ பிரபு |
“மனித இயல்பிலேயே மிகவும் போற்றத்தக்க இயல்பு எவை என்று காந்தியிடம் கேட்டால், அடுத்த கணமே, எந்த வித யோசனையும் இல்லாமல், வீரமும் அகிம்சையும் என்கிறார். இவைகளை கோழையால் பயன்படுத்த முடியாது. வீரர்களால்தான் பயன்படுத்த முடியும் என்றும் சொல்கிறார். |
தலாய் லாமா |
மகாத்மா காந்தி மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. மனித இயல்பை நன்கு அறிந்த சிறந்த மனிதர் அவர். மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்துவதிலும் எதிர்மறை எண்ணங்களை விலக்குவதிலும் குறியாக இருந்தவர். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து காந்தியின் கருத்துகளால் நான் ஈர்க்கப்பட்டவன். வன்முறையற்ற அகிம்சை நிலை என்பது வன்முறை இல்லாத நிலையன்று. அது உண்மையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றார். |
பியர்ல் எஸ் பக் |
“அவர் நல்லவர். நல்லவர்தான் என்பதை அவரும் அறிவார். நாமெல்லோரும் அறிவோம் அவர் நல்லவர்தான் என்று. அவரைக் கொன்ற அந்த மனிதனும் அறிவான் காந்தி நல்லவர் என்பதை. |